Tamil Grammar
Tamil
Group 1
Group 2
Group 4
VAO
TNPSC General Tamil and Grammar Notes: பொதுத்தமிழ்: இலக்கியம் மற்றும் இலக்கணச் சுருக்கம்
Last updated: 17 May 2026
1. எட்டுத்தொகை நூல்கள் - ஒரு பார்வை
| நூல் | அடி வரையறை | தொகுத்தவர் / தொகுப்பித்தவர் | சிறப்புத் தகவல்கள் |
|---|---|---|---|
| நற்றிணை | 9 அடி - 12 அடி | பன்னாடு தந்த மாறன் வழுதி (தொகுப்பித்தவர்) | 'நல்' என்ற அடைமொழி கொண்டது. 'நல்ல திணை' எனப் போற்றப்படுகிறது. |
| குறுந்தொகை | 4 அடி - 8 அடி | பூரிக்கோ (தொகுத்தவர்) | 'நல்ல' குறுந்தொகை என அழைக்கப்படும். முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல். 401 பாடல்களைக் கொண்டது. |
| ஐங்குறுநூறு | 3 அடி - 6 அடி | கூடலூர் கிழார் (தொகுத்தவர்), யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (தொகுப்பித்தவர்) | அகவற்பாவால் ஆனது. ஐந்து திணைகளையும் ஐந்து புலவர்கள் பாடியுள்ளனர்: குறிஞ்சி (கபிலர்), முல்லை (பேயனார்), மருதம் (ஓரம்போகியார்), நெய்தல் (அம்முவனார்), பாலை (ஓதலாந்தையார்). |
| கலித்தொகை | - | நல்லந்துவனார் (தொகுத்தவர்) | "கற்றறிந்தோர் ஏத்தும் கலி" என்று போற்றப்படும். 150 பாடல்களைக் கொண்டது. |
| பதிற்றுப்பற்று | - | - | சேர மன்னர்கள் 10 பேரின் சிறப்புகளைக் கூறும் நூல். இது சேரர்களின் கலைக்களஞ்சியம். முதல் மற்றும் இறுதிப் பத்துகள் கிடைக்கவில்லை. |
| பரிபாடல் | - | கீரந்தையார் (ஆசிரியர்) | "ஓங்கு பரிபாடல்" என அழைக்கப்படும். எட்டுத்தொகையில் அகமும் புறமும் கலந்த ஒரே நூல். இது ஒரு இசைப்பாடல் நூல். |
| அகநானூறு | 13 அடி - 31 அடி | உருத்திரசன்மனார் (தொகுத்தவர்), பாண்டியன் உக்கிரப்பெருவழுதி (தொகுப்பித்தவர்) | வேறுபெயர்: நெடுந்தொகை. மூன்று பிரிவுகள்: களிற்றியானைநிரை (120), மணிமிடைப்பவளம் (180), நித்திலக்கோவை (100). |
| புறநானூறு | - | - | தமிழர்களின் கலைக்களஞ்சியம் மற்றும் வரலாற்றுப் பெட்டகம். ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உ.வே.சா 1894-ல் முதலில் பதிப்பித்தார். |
2. முக்கிய இதழ்கள் மற்றும் ஆசிரியர்கள்
- பெருஞ்சித்திரனார்: தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்.
- பாரதியார்: இந்தியா, விஜயா.
- பாரதிதாசன்: குயில்.
- அயோத்திதாசர்: ஒருபைசா தமிழன்.
- ந. பிச்சமூர்த்தி: அனுமன், நவஇந்தியா.
- மறைமலை அடிகள்: ஞான சாகரம்.
- சி.சு. செல்லப்பா: எழுத்து.
3. நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை (முக்கியமானவை)
- திருவாசகம்: 51 பதிகங்கள், 658 பாடல்கள்.
- சீவகசிந்தாமணி: 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள்.
- தேம்பாவணி: 3 காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்கள்.
- மதுரைக்காஞ்சி: மொத்தம் 782 அடிகள், இதில் 354 அடிகள் மதுரையை மட்டும் சிறப்பிக்கின்றன.
- திருவருட்பா: 6 திருமுறைகள், 5818 பாடல்கள்.
- ஆசாரக்கோவை: 100 வெண்பாக்கள்.
4. மரபுத் தொடர்கள் மற்றும் ஒலிக் குறிப்புகள்
வினை மரபுகள்:
- அம்பு எய்தார்.
- ஆடை நெய்தார்.
- தண்ணீர் குடித்தான் / பால் பருகினான்.
- கூடை முடைந்தார்.
- சுவர் எழுப்பினார்.
விலங்கு ஒலிகள்:
- ஆந்தை அலறும், காகம் கரையும், குதிரை கனைக்கும்.
- குரங்கு அலப்பும், மயில் அகவும், யானை பிளிரும்.
- புலி உறுமும், சிங்கம் முழங்கும், நரி ஊளையிடும்.
5. சிறப்புப் பெயர்கள் (டி.என்.பி.எஸ்.சி அடிக்கடி கேட்பவை)
- பாவலரேறு: பெருஞ்சித்திரனார்.
- மக்கள் கவிஞர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
- பகுத்தறிவுப் பகலவன் / வைக்கம் வீரர்: பெரியார்.
- மொழி ஞாயிறு: தேவநேயப் பாவாணர்.
- தென்னகத்து பெர்னாட்ஷா: பேரறிஞர் அண்ணா.
- புதுக்கவிதையின் தந்தை: நா. பிச்சமூர்த்தி.
- வசன நடை கைவந்த வள்ளலார்: ஆறுமுக நாவலர்.
- இஸ்மத் சன்னியாசி (தூய துறவி): வீரமாமுனிவர்.
6. அறிவியல் மற்றும் பொதுத் தகவல்கள்
- சலீம் அலி: இந்தியாவின் பறவை மனிதர். இவரது சுயசரிதை நூல் 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' (The Fall of Sparrow).
- உலக சிட்டுக்குருவிகள் தினம்: மார்ச் 20.
- ஆர்டிக் ஆலா: உலகிலேயே நெடுந்தொலைவு (22,000 கி.மீ) பயணம் செய்யும் பறவையினம்.
- சோபியா: சவுதி அரேபியா குடியுரிமை வழங்கிய முதல் ரோபோ.
- அப்துல் கலாம்: இவருக்குப் பிடித்த நூல் 'திருக்குறள்' மற்றும் லிலியன் வாட்சன் எழுதிய 'விளக்குகள் பல தந்த ஒளி'.
- தேசிய அறிவியல் தினம்: பிப்ரவரி 28 (இராமன் விளைவு கண்டறியப்பட்ட நாள்).
- இந்திய நூலக விதிகளின் தந்தை: முனைவர் இரா. அரங்கநாதன்.
7. இலக்கணக் குறிப்புகள் (சுருக்கம்)
- தமிழ் இலக்கணம் 5 வகைப்படும்.
- சார்பெழுத்துகள் 10 வகைப்படும்.
- வழக்கு 2 வகை (தகுதி வழக்கு, இயல்பு வழக்கு).
- பகுபத உறுப்புகள் 6 வகைப்படும்.
- தொகைநிலைத் தொடர் 6 வகை, தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும்.
- யாப்பின் உறுப்புகள் 6 வகைப்படும்.